Wednesday, September 15, 2010

மனிதம் மதிக்கப்படுமா???


மனிதம் மதிக்கப்படுமா???

மனிதம் மறக்கப்பட்ட ஒரு வார்த்தை
மானுடமே ஊன் உடலிற்கு ஆசைப்பட்டு
மறந்து போனதொரு வார்த்தை

"தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு "
என்ற வரிகளை மறந்து
"தன்னலம் காக்க தமிழ் ஈழத்தை வதைக்கும்"
சிங்களச் சிப்பாய்களுக்கு தெரியுமா?
மனிதம் என்னவென்று??!!

"ஈகை குணத்திற்கு பெயர் பெற்ற இம் மண்ணில்"
யாரும் வருகிறார்களோ என்று.........
கதவடைத்து சாப்பிடும் கனவங்களுக்குத்  தெரியுமா???
மனிதம் என்னவென்று??!!

"முழு நிலக் காட்டிச் சொருடி வளர்த்து
முது கலைகளிலும் பட்டம் வாங்க வாய்த்த பெற்றோர்களை....."
முதியோர் இல்லத்தில் சேர்க்கும்
முட்டாள் பிள்ளைக்கு தெரியுமா??!!
மனிதம் என்னவென்று??!!
அன்று
"காந்தியடிகள் கண்ட மனிதம்...
அனைவரும் அமைதி காண்பதில் இருந்தது...."
"பாரதி கண்ட மனிதம்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவிப்பதில் இருந்தது..."

இன்று
"அணு சோதனை நடத்தி
அமைதியை குலைக்கும் நாடுகளுக்கும்....."
"கல்விக் கூடத்தை
காசு பார்க்கும் கேளிக்கை கூடமாக்கிய.....
கல்வியாளர்களுக்கு தெரியுமா??!!
மனிதம் என்னவென்று??!!

"மனிதம் என்றல் என்னவென்றே தெரியாத இச்சமுதாயத்தில்...
மனிதம் மதிக்கப் படாமல் கூட இருக்கலாம்........
மிதிக்கப் படமலாவது காக்க வேண்டும்!!!!!!!

Friday, September 3, 2010

அன்னமும் அன்றிலும்..!!


முன்பு இருந்தது....!!