Wednesday, October 27, 2010

சர்வ வல்லமை பெறத்துடிக்கும் காதற்பறவை......!!



♫♫♫
தொடுவானம்
தொடும் மேகம்

வானம் நான்.. வண்ணம் நீ..!
மேகம் நான்.. மின்னல் நீ..!
பறவை நான்.. சிறகு நீ..!

தொடுவேன் வண்ணம் தொடுவேன்..!
பிழிவேன் மின்னல் பிழிவேன்..!

புஜ்ஜு குட்டி... செல்ல குட்டி.. உம்ம்மா...




Monday, October 11, 2010

மௌனங்களில் சிக்கி இருந்தன சொற்கள்..

 
*
இருளுக்கான  இடைவெளி நீள்கையில்
இமைகளுக்கான இடைவெளி குறைகிறது..!!

*
உன் கனவிற்கும்
என் கனவிற்கும்
இடையே

துயில்கிறது..

வாழ்வதாக
நாம்
சொல்லித் திரியும் வாழ்க்கை..!

*
மருதாணி சிவப்பது பற்றி
சொல்லிக்கொண்டிருந்தேன்..

கடற்கரையில் நீ இருந்து
கேட்டுக்கொண்டிருந்தாய்..

அலைகள் இரைச்சலிட்டு கொண்டிருந்தது..
நீ அலைகளை பார்த்துக்கொண்டிருந்தாய்..

நான் உன்னை முறைத்தேன்..

அலைகள் மௌனித்துக் கொண்டன..!

வானம் மருதாணி பூசிக்கொண்டது..

*
பாண்டி ஆட்டத்தின் கட்டங்களை

மிதிக்காது கடந்தாய்..

கட்டங்களும் கடந்து கொண்டிருந்தது

மிதிபடாமல்..


*
கை நிறைய மேகம் வைத்திருந்தாய்.,

தாகத்துடன் அலைகிறது வானம்..

நகக் கண்ணில் கோடிழுத்து

எதிர்ப்பை காட்டிச் சென்றது.,

வானம் கடக்கும் கொக்கு..!